நாடு முழுவதும் காசோலை மோசடியை தடுக்க வங்கிகளில் புதிய பாதுகாப்பு முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். வங்கி என்பது நம்முடைய பண பரிமாற்றம் மற்றும் கடன் தேவைக்கு பயன் படுகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதை போல, காசோலை வாயிலாக மோசடிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனால் போலியான காசோலைகளை தயாரித்து அதன் மூலம் நிதி மோசடி செய்து வருவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காசோலை பரிவர்த்தனையை பாதுகாப்பதற்கு ரிசர்வ் வங்கி ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி காசோலை மோசடிகளை தடுக்க 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கிகளில் positive pay என்ற புதிய பாதுகாப்பு இன்று அமல்படுத்தப்படுகிறது. அதனால் காசோலை வழங்குவோர், எண், தொகை, நாள், அதை பெரும் நபர், காசோலையின் முன் பின் பக்க படத்தை வங்கிக்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகு காசோலை விவரங்களை சரிபார்த்த பிறகே வங்கிகள் தொகையை வழங்கும்.