Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று முதல் ரெம்டெசிவிர் விற்பனை இடமாற்றம்…. அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26 ஆம் தேதி  முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இன்று முதல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என டீன் வசந்தாமணி தெரிவித்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருந்து விற்கப்பட்டு வந்த நிலையில் கூட்டம் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 2 மையங்களில் இன்று முதல் மருந்து விற்பனை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |