மகாராஷ்டிரா மாநில வனத்துறை மற்றும் கலாச்சார துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பாஜகவின் சுதீர் முக்கந்திவார், மாநிலத்தில் இனி அரசாங்க அதிகாரிகள் செல்போன் அழைப்புகளை எடுத்ததும் ஹலோ விற்கு பதிலாக வந்தே மாதரம் எனக் கூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்று கூறிய அவர், ஹலோ ஒரு ஆங்கில வார்த்தை.
அதை விட்டு விடுவது முக்கியம். வந்தே மாதரம் என்பது வெறும் வார்த்தை அல்ல ஒவ்வொரு இந்தியனும் அனுபவிக்கும் உணர்வு. நாம் சுதந்திரத்தின் 76 வது ஆண்டில் நுழைகின்றோம். சுதந்திரத்தை கொண்டாடவும்.எனவே அதிகாரிகள் வணக்கம் என்பதற்கு பதிலாக தொலைபேசியில் வந்தே மாதரம் என்று சொல்ல நான் விரும்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.