Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இன்று முதல் மீண்டும் அனுமதி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.  மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள காரணத்தால் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மற்ற மாவட்டங்களுக்கு மட்டுமே தளர்வுகள் பொருந்தும்.

இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இன்று முதல் காய்கறி மார்க்கெட் மீண்டும் செயல்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் உழவர் சந்தை, பெரிய மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள் வழக்கம் போல் அந்த இடங்களில் இயங்கும், மக்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |