தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் நாகையில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை செல்ல தடை, அனைத்து கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.