Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் தரிசனதிற்கு அனுமதி…. புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று முதல் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இன்று முதல் கார்த்திகை மாதம் பிறப்பதால், இன்றிலிருந்து 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. இதனையடுத்து இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி 2 டேஸ் போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசி சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக வரும் வியாழக்கிழமை வரை பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

Categories

Tech |