தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தின் கீழ் பல குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக இந்த சத்துணவுத் திட்டம் வழங்கப்படாமல் நிறுத்தி வைத்திருந்தது. இதை வழங்கவேண்டும் என்று நீதிமன்றங்கள் வரை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான் கோவை மாவட்டத்தில் இது குறித்தான அறிவிப்பு ஓன்று வெளியாகி உள்ளது.
கோவையில் சத்துணவு பயனாளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் இன்று முதல் 23ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) பள்ளிக்கு நேரில் சென்று அரிசி, பருப்பை பெற்றுக்கொள்ளலாம். ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு சத்துணவு வழங்க முடியாத சூழலில் உள்ள உணவுப் பொருட்களாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.