கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் போடும் பணி இன்று முதல் தொடங்கி ஐரோப்பிய யூனியனில் நடைபெற்று வருகிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் போடும் பணி ஐரோப்பிய யூனியனில் நடைபெற்று வருகிறது. யூனியனில் உள்ள 27 நாடுகளில் இந்த பணிகள் துவங்கியுள்ளது. பிரிட்டனில் முதன் முதலாக இந்த தடுப்பூசி வழங்கும் பணி துவங்கியது. ஒரு சில நாடுகளில் வயதானவர்களும், மருத்துவர்களும் முன்வந்து இந்த தடுப்பூசி போட்டுக் கொள்கின்றன.