Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக அம்ரிதா எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 10.10 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இதேபோன்று மதுரையிலிருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரயில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை.

இதனை அடுத்து கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல் நேற்று வரை பயணிகளின் வேண்டுகோளுக்காக ரயில் ஒட்டன்சத்திரத்தில் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை மதுரை- திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் இன்றிலிருந்து இரு மார்க்கங்களிலும் ஒட்டன்சத்திரத்தில் ஒரு நிமிடம் மட்டும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |