Categories
மாநில செய்திகள்

இன்று மற்றும் நாளைக்குள்…”இது எல்லாம் பண்ணி முடிச்சு இருக்கணும்”… சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு…!!

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை எடுத்து சென்றால் அதற்கு உரிய ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்றும், பணம் பட்டுவாடா புகார் வந்தால் உடனே அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை அமலுக்கு வந்துவிட்ட நிலையில் அரசு அலுவலங்கள், அரசு இடங்களில், அரசியல் கட்சி தொடர்பான விளம்பரங்கள் சுவரொட்டிகள் போஸ்டர்கள் உடனே அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலைக்குள் விளம்பரங்களை அகற்றிவிட வேண்டும் என்றும், ரயில் நிலையங்கள், போக்குவரத்து நிலையங்களில் நாளை தினத்திற்குள் விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி துவங்கியுள்ளது.

Categories

Tech |