Categories
மாநில செய்திகள்

“இன்று ( பிப்.1 ) பள்ளிகள் திறப்பு”…. வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?…. முழு விவரம் இதோ….!!!!

இன்று ( பிப்.1 ) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து பொது சுகாதாரத்துறை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில்,

* 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையும், கல்லூரிகளும் இன்று முதல் நேரடியாகத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* குழுவாக அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கக் கூடாது.

* கல்லூரிகள், பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

* அனைவரும் வாய், மூக்கை மூடும் வகையில் முகக்கவசத்தை அனைத்து நேரங்களிலும் அணிந்திருக்க வேண்டும்.

* கை கழுவுதல் அல்லது சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

* தினமும் பள்ளி வளாகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* ஆசிரியர்கள், 15 முதல் 18 வயதுடைய மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

* கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகைதரக் கூடாது.

* காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

* பள்ளி வளாகங்களில் எச்சில் துப்புவதை தடுக்க வேண்டும்.

* மாணவர்கள் வருவதற்கும், வெளியில் செல்வதற்கும் தனித்தனியாக வழிகளை உருவாக்கலாம்.

* பள்ளிகளில் ஆன்லைன் அல்லது நேரடி வகுப்புகள் நடத்துவதை அந்தப் பள்ளியின் நிர்வாகம், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து முடிவு செய்துகொள்ளலாம் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

* இந்த வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |