Categories
தேசிய செய்திகள்

இன்று காலை 10 மணி முதல் அமல்…. விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு…. மத்திய அரசு உத்தரவு….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுமாறும் கொரோனா உறுதியானவர்களின் மரபணுவை சோதனைக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் விமானத்தில் உள்ள மொத்த பயணிகளில் இரண்டு சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகும் பட்சத்தில் அந்த பயணிகளின் மாதிரி மற்றும் மரபணு சோதனைக்கு அனுப்பப்படும். இந்த புதிய கட்டுப்பாடு ஆனது இன்று  டிசம்பர் 24ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |