ஐ.நா. பொது சபை தலைவர் அனைத்து நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா. தலைமையகத்தில் 77-வது ஆண்டு பொதுச் சபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய அன்டோனியா குட்டெரெஸ் கூறியதாவது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் புவி அரசியலை மையமாக கொண்டு பிரிந்துள்ளது. இந்த செயல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பணியை பாதிக்கும்.
மேலும் சர்வதேச சட்டம், ஜனநாயக அமைப்புகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறையும். இந்நிலையில் சர்வதேச ஒத்துழைப்பு இல்லாத சூழலால் உலகமே முடங்கிய ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நிலை மேலும் தொடரக்கூடாது. மேலும் ஜி-20 நாடுகளிடம் சர்வதேச நாடுகள் சில சிக்கியுள்ளது.
அது ஒரு கட்டத்தில் ஜி 2 உலகமாக உருவெடுத்து தற்போது அதற்கு முடிவு காண முடியாத நிலை அடைந்துள்ளது. அதற்கு காரணம் ஒத்துழைப்பு இல்லை, பேச்சுவார்த்தை இல்லை, பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை என்ற நிலை எட்டியுள்ளது. மேலும் பேச்சு வார்த்தை தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும். இந்நிலையில் துருக்கி உதவியுடன் உக்ரைன் ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
அதனால் கருங்கடலில் உக்ரைன் நாட்டு உணவுப்பொருட்கள் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதிசயமாக கூறப்படும் இந்த செயல் பேச்சுவார்த்தை மூலமே நடைபெற்றது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் மனித உரிமை மீறலை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் வெறுப்பு பேச்சு, தவறான தாக்குதல், அவதூறுகள் ஆகியவை பெண்களை பாதிக்கப்படும் குழுக்களை குறி வைத்து பெருகி வருகின்றனர்.மேலும் நமது தகவல்கள் விற்கப்பட்டு நமது நடத்தைகள் கண்காணிக்கப்படுகின்றது .
இந்நிலையில் சேர்க்கை நுண்ணறிவுக்காக நேர்மையான தகவல்கள் அளிக்கும் முறைக்கும், ஊடகம் உண்மையான ஜனநாயகம் ஆகியவற்றுக்கு எதிரான சமரசம் செய்து கொண்டுள்ளோம். மேலும் பருவநிலை மாற்றம் இயற்கைக்கு எதிரான பாதிப்புகளை உலக நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு அனைத்து நாடுகளும் பல்வேறு அமைப்புகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்நிலையில் உலக மக்களின் ஆதரவு இருந்தும் உலகம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 80 சதவீதம் பசுமை இல்லா வாய்வு ஜி 20 நாடுகளில் இருந்து தான் வெளியாகின்றது. ஆனால் அந்த நாடுகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் குறைவான பங்களிப்பை அழித்து வருகிறது. மேலும் அனைத்து நாடுகளும் வேறுபாடுகளை மறந்து உலக நாடுகள் ஒன்றுபட்ட அமைதியை நிலை நாட்ட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.