வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் 24ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளர்ச்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.