Categories
மாநில செய்திகள்

இன்றும் நாளையும் பாடம் நடத்த கூடாது… ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இன்றும் நாளையும் பாடங்கள் எடுக்காமல் மாணவர்களுக்கு மனதிட ஆலோசனைகள் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு பரிசீலனை செய்தது.

அதனால் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 90 சதவீதம் பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகின்றன. அதனால் மாணவர்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி இன்றும் நாளையும் பாடங்கள் எடுக்காமல் மாணவர்களுக்கு பொதுவான ஆலோசனைகள் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கழிவறை செல்லும் போதும், உணவு அருந்தும் போது மாணவர்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இறைவணக்கம் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |