திமுக வெற்றிக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை கண்டித்து அமைச்சர் பெரியகருப்பன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 28 மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளார்கள்.
தோல்வியை ஒப்புக் கொள்ளவும் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று ஏற்றுக் கொள்ளவும் இவர்கள் இருவருக்கும் மனம் இல்லை. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மாநில தேர்தல் ஆணையத்தை தங்களுடைய கைப்பாவையாக வைத்த நியாபகத்தில், தற்போது இந்த கற்பனை குற்றச்சாட்டை இருவரும் வைத்திருக்கிறார்கள் என்று கடுமையாக பேசியுள்ளார்.