Categories
தேசிய செய்திகள்

இனி 2 மணி நேரம் அல்ல…. வெறும் 15 நிமிடத்தில்…. ஹெலிகாப்டர் டாக்சி சேவை வசதி…. கட்டணம் எவ்வளவு….????

பொதுவாக ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றின் மூலம் தான் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வசதியாக பயணம் செய்வதற்கு டாக்சி சேவை உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் இந்த டாக்ஸி சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அந்த வகையில் தற்போது பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் இதனை குறைக்கும் விதமாக தனியார் ஹெலிகாப்டர் ஒன்று அசத்தலான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி தனியார் ஹெலிகாப்டர் சேவை அக்டோபர் 10-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த ஹெலிகாப்டர் டாக்ஸியில் ஒரு முறை பயணம் செய்ய ரூபாய் 3250 கட்டணத்தில் சேவை அளிக்கப்பட உள்ளது. இரண்டு மணி நேரம் போக்குவரத்துக்கு பதிலாக 15 நிமிடங்களில் பயணிகள் சென்றடைய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |