Categories
தேசிய செய்திகள்

இனி வீட்டிலிருந்தே சட்ட ஆலோசனை பெறலாம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (நல்சா) நவம்பர் 9, 1995 அன்று சட்ட சேவைகள் அதிகாரிகள் சட்டம் 1987 இன் அதிகாரத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் தகுதியானவர்களுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதும், வழக்குகளை விரைவாக தீர்க்க லோக் அதாலத்-களை ஒழுங்கமைக்கவும் உருவாக்கப்பட்டது .

இந்நிலையில் இலவச சட்ட சேவை வழங்குவதற்காக நீதித்துறை, சட்டம் மற்றும் நிதி அமைச்சகம், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெய்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நடப்பு ஆண்டுமுதல் மக்களுக்கு தொலைதூர சட்ட சேவை இலவசமாக வழங்கப்படும் என்றும், காணொலி அல்லது தொலைபேசி வாயிலாக இலவச சட்ட சேவையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |