இந்தியாவில் லட்சக்கணக்கான பயனாளர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் நம்பர் ஒன் செயலியாக whatsapp செயலி விளங்குகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்,whatsapp என அனைத்தும் பயனர்கள் தங்கள் கணக்கில் இருந்து தற்காலிக புதுப்பிப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான ஸ்டேட்டஸ் வசதியை வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் 32 பேர் வரை குரூப் கால் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் வாட்ஸ் அப்புக்கு 49 கோடி பயனாளர்கள் இருப்பதால் புதிய வசதி சந்தையில் போட்டியை அதிகரிக்க செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விரைவில் whatsapp காலில் 32 பேர் குரூப் கால் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.