ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகை வீடுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரி திருத்தம், புதிதாக சில பொருள்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த முடிவுகள் ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி விதிமுறையும் ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த விதிமுறை ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்துள்ள வாடகைதாரருக்கு மட்டுமே பொருந்தும். தனிநபர் சொந்த பயன்பாட்டுக்காக வாடகை வீடு எடுத்திருந்தால் இந்த ஜிஎஸ்டி வரி பொருந்தாது. வணிக நோக்கத்துக்காக வீடு வாடகை எடுத்திருந்தால் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.