இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு பின் இப்போது ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ரயில் பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு முன்பதிவு இல்லா ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் IRCTC பயணிகளுக்கு பல புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் IRCTC இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக பயணிகள் வீட்டில் இருந்தவாறு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அத்துடன் உங்களின் போட்டிங் பாயின்டை மாற்றிகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் பயணிகள் தங்களின் குறைகளை தெரிவிக்க ஹெல்ப்லைன் எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் மூலமாக பயணிகள் ரயில் நிலையம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். மேலும் இப்போது உணவுகளை வாங்கும்போது க்யூ ஆர் கோடு வாயிலாக பணம் செலுத்தும் வசதியை IRCTC அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 13 -15ம் தேதி வரை தொடர் 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நாளை சுதந்திரதின விழாவை முன்னிட்டு நாடு முழுதும் இயங்கும் ரயில்களில் புது டெல்லிக்கு பார்சல் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சேலம் ரயில் நிலையத்திலிருந்து நூல், பனியன், பட்டு வேஷ்டி, சேலை, இருசக்கர வாகனம், கொசுவலை ஆகியவை புதுடெல்லிக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது. இதனை அனுப்ப நாளை வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிற பகுதிகளுக்கு அனுப்பபட்டு வரும் பார்சலும் பலத்த பரிசோதனைக்கு பிறகே ரயில்களில் ஏற்றப்படுகிறது.