Categories
உலக செய்திகள்

இனி மருத்துவமனை செல்ல வேண்டாம்…. வீட்டிலேயே கொரோனா தடுப்பு மருந்து…. புதிய அறிவிப்பு….!!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து உள்ளது. அதனை கட்டுப்படுத்தும் பணியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனையடுத்து வாய்வழியாக உட் கொள்ளும் வகையிலான கொரோனா தடுப்பு மருந்துகளை பைசர் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை மக்கள் வீட்டில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆண்டின் இறுதியில் இந்த மருந்துகள் வெளியாகும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |