தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா 3-வது அலை முடிவுக்கு வந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதேபோல் நாடு முழுவதும் பிப்ரவரி 2-வது வாரம் 3-ஆம் அலை முடிவுக்கு வரும் என்று நிபுணர்கள் கூறியிருந்த நிலையில் ஜனவரி மாதம் உச்சம் தொட்ட 3-ஆம் அலை இந்த மாத இறுதிக்குள் முற்றிலும் நிறைவடையும் என்று கணித்துள்ளனர்.