திருப்பதி கோவிலின் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஏ.வி தர்மா ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமி கோவில் உலக புகழ் பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நடைபெறுகிறது. இது குறித்து தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஏ.வி. தர்மா ரெட்டி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் பிரம்மோற்சவ விழா தற்போது நடைபெறுகிறது. அதில் தினமும் காலை மற்றும் இரவில் நான்கு மாத வீதிகளில் வாகன சேவை நடக்கிறது. அதில் உற்சவர் மலைச்சாமி தனித்தும் உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் தங்கம், வைர ஆவணங்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
அப்போது மாடவிதிகளில் அமர்ந்திருக்கும் பக்தர்கள் உற்சவர் மீது சில்லறை நாணயங்களை வீசி வருகின்றனர். இப்படி வீசக்கூடாது. இதனால் வாகனத்தில் அமர்ந்திருக்கும் அர்ச்சகர்களுக்கும், அதனை சுமந்து செல்லும் ஊழியர்களுக்கும் சிரமம் ஏற்படும். மேலும் சுவாமிக்கு அணியப்பட்டிருக்கும் தங்க வைர நகைகள் சேதம் அடைய வாய்ப்புகள் உள்ளது. எனவே பக்தர்கள் எங்களது வேண்டுகோளை ஏற்று உற்சவர் மீது நாணயங்களை வீசுவதை தவிர்க்க வேண்டும். மேலும் பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என அவர் அதில் கூறியுள்ளார்.