தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்க ஐஐடி மற்றும் சில அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி துறையை கூறியிருக்கிறது.
தாய் மொழியில் தொழில்நுட்ப படிப்பு மத்திய அரசின் முக்கியமான கொள்கை முடிவுகளில் ஒன்றாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொழில்நுட்ப படிப்புகள் ( இன்ஜினியரிங் மற்றும் மற்ற தொழில்நுட்ப படிப்புகள்) தாய்மொழியில் கற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்தி மொழியில் இந்த கோரிக்கை என்பது நீண்ட நாட்களாக இருந்து வந்தது. தமிழகத்திலும் சட்டப்படிப்பை தமிழில் படிக்கும் போது டெக்னிகல் படிப்புகளை எதற்காக தாய்மொழியில் படிக்காமல் இருக்க வேண்டும்? என்ற நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் தொடர்ச்சியான பல கட்ட ஆலோசனை நடத்தப்பட்டு நிலையில்,
இன்றைய தினம் மத்திய கல்வி துறை அமைச்சகம் சார்பில் அதன் அமைச்சராக இருக்கக் கூடிய ரமேஷ் போக்ரியால் மூத்த அதிகாரிகளுடன் ஒரு விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் அடுத்த ஆண்டிலிருந்து இந்த நடைமுறையை கொண்டு வருவது என்று அவர்கள் முடிவு எடுத்து இருக்கின்றார்கள் .