ட்விட்டர் நிறுவனம் தனது பயனாளர்கள் வாய்ஸ் மெசேஜ் செய்துகொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. தங்கள் பயனாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு அம்சங்களை அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அதன்படி ட்விட்டரில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய வாய்ஸ் மெசேஜ் அனுப்ப மற்ற தளங்களில் DM அம்சங்களை போன்றது. வாய்ஸ் ட்விட்டர்களை போலவே, பயனாளர்கள் அதிகபட்சமாக 140 விநாடிகள் வரையில் நீளமான வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும். புதிய அம்சத்தை பெறுவதற்கு முதலில் உங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள ஆப்பிள் ஆப் ஸ்டோர் இருந்தே ட்விட்டர் பயன்பாட்டை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இது பற்றி மேலும் நீங்கள் தெரிந்துகொள்ள டுவிட்டர் இணைய தள பக்கத்தை சென்று பார்க்கலாம்.