தமிழகத்தில் பண்டிகை கால கூட்டத்தை சமாளிப்பதற்காக இன்று முதல் குறிப்பிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.அதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் ரயில் போக்குவரத்து சேவையை அதிகம் பேர் பயன்படுத்தும் வகையில் குறிப்பிட்ட ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.அவ்வகையில் சென்னை எழும்பூர் மற்றும் குருவாயூர் ரயிலில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பெட்டி இணைக்கப்படுகிறது.அதனைப் போலவே தாம்பரம் மற்றும் நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.