Categories
தேசிய செய்திகள்

இனி சிலிண்டர் வாங்கறது ரொம்ப கஷ்டம்…. மத்திய அரசு போட்ட புதிய ப்ளான்…. வெளியான தகவல்….!!!!

சமையல் சிலிண்டர் மானியம் பெறக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி உஜ்வாலா  திட்டத்தின் கீழ் சிலிண்டருக்கு கிடைக்கும் மானியத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது உஜ்வாலா திட்டத்தின் கீழ் புதிய இணைப்புக்கான மானியத்தில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெட்ரோலிய அமைச்சகம் இரண்டு புதிய கட்டமைப்புகளுக்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளது.

அது விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பட்ஜெட்டில் ஒரு கோடி புதிய இணைப்புகளை வழங்குவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால் தற்போது சிலிண்டர் மானியத்தில் புதிய மாற்றம் வர உள்ளது. வாடிக்கையாளர்கள் முதலில் சிலிண்டர் வாங்கும் போது முன்பணம் செலுத்த வேண்டும். இந்த புதிய மாற்றத்திற்கு பிறகு முன் பணம் செலுத்தும் நிறுவனம் மொத்தமாக 1,600 ரூபாய் வசூல் செய்யும். தற்போது எண்ணெய் விநியோக நிறுவனங்கள் அந்த முன் பணத்தை EMI வடிவேல் வசூல் செய்கின்றன.

இது இனி அப்படி இருக்காது. சிலிண்டர் வாங்குவோர் அந்தப் பணத்தை அப்படியே செலுத்த வேண்டியிருக்கும். மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 3,200 ரூபாய். அதற்கு மத்திய அரசிடம் இருந்து 1,600 ரூபாய் மானியம் கிடைக்கின்றது. அதுமட்டுமல்லாமல் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் முன்பணமாக 1600 ரூபாய் கொடுக்கின்றது.

இருந்தாலும் இந்த மானியத் தொகை மீண்டும் நிரம்பும் போது EMI ஆக வசூல் செய்யப் படுகின்றது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் எரிவாயு இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம். அதற்கு pmujjwalayojana.con என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பித்து இதன் முழு தகவல்களை பெறலாம்.

மேலும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு முதலில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள எல்பிஜி விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும். அதில் விண்ணப்பித்த பெண் தனது முழு முகவரி மற்றும் ஜன்தன் வங்கி கணக்கு,குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணையும் அதில் கொடுக்க வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.

Categories

Tech |