இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அனுமதி அளித்துள்ளது. கோவின் செயலிலும் பதிவு செய்து அல்லது அருகிலுள்ள தடுப்பூசி மையத்திற்கு நேரில் சென்று தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி தொடர்பாக தேசிய தொழில்நுட்ப ஆலோசனையை ஏற்ற கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.