Categories
தேசிய செய்திகள்

இனி எல்லாமே ஈசிதான்…. வீட்டிலிருந்து ரயில் டிக்கெட் புக்கிங்…. பயணிகள் ஹேப்பி…!!

ரயில்களில் கன்பார்ம் டிக்கெட் பதிவு உறுதி செய்வதற்கு கன்பாம் தட்கல்  என்னும் ஆப்பை ரயில்வே டிக்கெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய ரயில்வே டிக்கெட் வழங்கும் நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் மூலமாக உறுதிப்படுத்தப்பட்ட சீட்டை பெற முடியும். மேலும் டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால் உங்கள் டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்படும். தட்கல் டிக்கட் உடனடியாக கிடைக்கIRCTC என்ற ஒரு தனி ஆப்பை  தான் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் குறிப்பிட்ட வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் தட்கல் ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும் இருக்கைகளில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம் எளிதாக டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். இனி வெவ்வேறு ரயில் எண்களை   பதவிட்டு  கிடைக்கக் கூடிய இருக்கைகளை தேட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஒரே நேரத்தில் அந்த வழித்தடத்தில் இயங்கும் அனைத்து ரயில்களிலும் கிடைக்கும் டிக்கெட் விவரங்களையும் பார்க்க முடியும். கன்ஃபார்ம் செய்யப்பட்ட டிக்கெட்டை உடனே பெறுவதற்கான சில வழிகள்:

மாஸ்டர் லிஸ்ட்டில் நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பும் அனைத்து பயணிகளின் தகவலையும் முன்பே  சேமித்து வைக்க வேண்டும்.

IRCTC கணக்கின் my profile பகுதிக்குச் சென்று உங்கள் இந்த மாஸ்டர் லிஸ்டை தயாரிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது நேரத்தை சேமிக்கலாம். புக்கிங் செய்யும்போது பயணிகளின் தகவல்கள் ஒரே கிளிக்கில் கிடைக்கும்.

டிக்கெட் முன்பதிவு செய்யும் போது உங்களது இண்டர்நெட் ஸ்பீடு வேகமாக இருக்க வேண்டும்

பணம் செலுத்த UPI Wallet அல்லது இண்டர்நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்த வேண்டும். இது நேரத்தை சேமிக்கும்.

நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலமாகவும் ஐஆர்சிடிசி இ-வாலட்டில் பணத்தைச் சேர்க்கலாம். அதன் மூலம் எளிதாக டிக்கெட் புக்கிங் செய்ய முடியும்.

Categories

Tech |