Categories
தேசிய செய்திகள்

இனி உங்க வீடு தேடி வரும்…. எங்கேயும் அலைய வேண்டாம்…. பென்ஷன் வாங்குவோருக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஹரியானா மாநிலத்தின் முதியோர் பென்ஷன் பெறுவதற்கு தகுதியான நபர்கள் அனைவருக்கும் வீட்டிலேயே நேரடியாக ஒப்புதல் வழங்க அரசு ஒப்புதல் அளித்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி இனி புதிதாக முதியோர் பென்ஷன் பெற தகுதியானவர்கள் அனைவருக்கும் வீட்டிற்கே நேரடியாக சென்று ஒப்புதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த புதிய வசதியால் வயது முதியோர் வீண் அலைச்சலை தவிர்க்கலாம். அரசின் இந்த அறிவிப்பு முதியோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு முதியோர் பென்ஷன் பெறுவதற்கு தகுதியான நபர்கள் அந்தியோத்யா கேந்திராகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் பலமுறை அலைய வேண்டிய அவசியம் இருந்தது. இதனால் வயது முதியோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் அவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் முதியோர் பென்ஷன் பெற தகுதியானவர்களுக்கு நேரடியாக அவரது வீட்டிற்கே சென்று ஒப்புதல் வழங்குவதற்கான திட்டத்திற்கு அரியானா அமைச்சரவை ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

அதனால் இனி அரசு அலுவலகத்திற்கு முதியோர் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அதுமட்டுமல்லாமல் ஒரு நபர் முதியோர் பென்ஷன் பெற தகுதியானவர் என்பதற்கு இனி அவரிடம் பரிவார் பெச்சன் பத்திரம் இருந்தால் மட்டுமே போதும் என அரசு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் முதியோர் பென்ஷன் பெற தகுதி பெறுவதால் அரசு அலுவலகம் மற்றும் பென்ஷன் அலுவலகத்திற்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது.

முதியோர் பென்ஷன் பெற தகுதியானவர்கள், 60 வயதைத் தாண்டியவர்கள், பயனாளி மற்றும் அவரின் கணவன்/மனைவியின் மொத்த ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. ஹரியானா மாநிலத்தில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஆவது அவர்கள் வசித்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் பென்ஷன் பெறுவதற்கு உள்ளது.

Categories

Tech |