தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சநிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனிடையே மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஊழியர்கள் அலுவலகத்தில் அனைவரும் முழுநேரமும் முறையாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே மாஸ்க் அணிதல் மிகவும் அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.