Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமே என்னால தாங்க முடியாது…. தொழிலாளி எடுத்த முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் தச்சு தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் ரவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து ரவி வீட்டிற்குள் மயங்கி கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் ரவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த ரவியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |