Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இனிமேல் யாரும் பெண் தர மாட்டார்கள்” மனநலம் பாதிக்கப்பட்டு வாலிபர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டாஞ்செட்டி ஊராட்சி மேல தெருவில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான பாலகுமார்(31) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட வேலைக்கு செல்லாமல் இருந்த பாலகுமார் திருமணம் ஆகவில்லை என மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனையடுத்து இனிமேல் தனக்கு யாரும் பெண் தர மாட்டார்கள் என நினைத்து பாலகுமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாலகுமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |