Categories
மாநில செய்திகள்

“இனவரம்பு இல்லாமல் உதவணும்”…. தேசிய கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்…..!!!!!

இனவரம்பு இல்லாமல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவவேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது குறித்து அவர் தன் ட்விட்டரில் பதிவில், “தமிழக முதல்வரின் உதவிகரங்கள், எல்லா தமிழருக்காகவும் நீள்வதை நன்றியுடன் வரவேற்கும். அதே சமயம் இன்று இலங்கையில் ஏற்படும் ஏகோபித்த போராட்டங்களை அனுசரிக்கும் வகையில் முதல்வரின் சமூகநீதி கரங்கள் இனவரம்பு இல்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீளவேண்டுமென கோருகிறோம்” என அதில் மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பாக இலங்கையில் வசிக்கும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள், மலையகத் தமிழர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு, உயிர்காக்கும் மருந்துகளை கப்பல் வாயிலாக தூத்துக்குடி துறைமுகம் மூலமாக அனுப்புவதற்குத் தயாராக இருக்கிறது. அத்துடன் மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் தூதரகம் வாயிலாக விநியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமெனவும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |