Categories
மாநில செய்திகள்

இந்த 2 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் மூடல்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருக்கிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் நாளை மதுபான கடைகள் அடைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் நாளை மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதை முன்னிட்டு குறிப்பிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

Categories

Tech |