Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த வெற்றிக்கு என் கணவரே காரணம்…. மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவி உருக்கம்…!!!

சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவி வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள பெரியார் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). இவர் 188 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருந்து வந்தவர். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 188வது வார்டில் தனது மனைவி சமீனாவை திமுக சார்பில் வேட்பாளராக களம் இறக்கினார்.

அதன் பின் மனைவியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரங்களில் அதிகமாக ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி 8 பேர் சேர்ந்த கும்பல் செல்வத்தை வெட்டிக் கொலை செய்துள்ளது. இதனால் திமுக பிரமுகர், தேர்தல் சமயத்தில் கொல்லப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் செல்வத்தின் மனைவி சமீனா கணவர் இறந்த நான்காவது நாளில், பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட 188 வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிட முன்வந்து நாமினேஷன் தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த வார்டில் அவரை எதிர்த்து போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் ஆனந்தியை வீழ்த்தி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சமீனா செல்வம், எனது வெற்றிக்காக என் கணவர் பாடுபட்டு உழைத்தார். அவரது கடும் உழைப்பால் தான் நான் இன்று வெற்றி பெற்றுள்ளேன். எனவே என் கணவர் என்னவெல்லாம் இந்த வார்டில் செய்ய நினைத்தாரோ அதை நான் செய்வேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |