சென்னையை அடுத்த கொளத்தூர் சேர்ந்த 28 வயது இளம்பெண் திருமணமாகி கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார். 2020 ஆம் வருடம் அவருக்கு முகநூல் மூலமாக திருநின்றவூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த விக்ரம்(33) என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது விக்ரம் இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே விக்ரமுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் விக்ரம் உடனான தொடர்பை துண்டித்துள்ளார். இந்த நிலையில் விக்ரம் எனக்கு ரூ.10 லட்சம் தர வேண்டும் இல்லை என்றால் நாம் ஒன்றாக இருந்த ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என இளம்பெண்ணை மிரட்டி உள்ளார். இதுபற்றி இளம்பெண் அளித்த புகாரின் பேரில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்ரமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.