Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த விஷயத்துல முதலமைச்சர் பழனிசாமி தோற்றுவிட்டார்- மு.க ஸ்டாலின் குற்றசாட்டு…!!!

கொரோனா  பரவலை தடுப்பதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதிலும் முதலமைச்சர் பழனிச்சாமியின் அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய்தொற்று பரவியியதையடுத்து மத்திய அரசால் மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்பு மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. எனவே, கொரோனா பரவலும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கிய காலத்திலிருந்தே திமுக அரசு தமிழக அரசின் நடவடிக்கை திருப்திகரமானதாக இல்லை என குற்றம் சாட்டி வந்தது.

ஆனால் அதிமுக அரசு இதனை தொடர்ந்து எதிர்த்து வந்தது.மேலும், நோய் பரவலை கட்டுப்படுத்தவும் பொதுமக்களை காப்பதற்காகவும் அதிமுக அரசு எல்லா வகையிலும் போராடி வருகின்றது என்ற விளக்கத்தை முன்வைத்தது. சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு தொடங்கவிருப்பதையொட்டி  திமுக மற்றும் அதிமுக அரசின் தலைவர்கள் மாறி மாறி தங்கள் கருத்தினை கூறிக்கொண்டே வருகின்றனர்.இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது கொரோனா  பரவலை தடுப்பதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதிலும் முதலமைச்சர் பழனிச்சாமியின் அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |