Categories
தேசிய செய்திகள்

இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க கூடாது – அசாதுதீன் ஓவைசி..!!

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க கூடாது என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கோவில் கட்டும் பணி களை நிர்வாகம் செய்ய 15 உறுப்பினர்களைக் கொண்ட, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்திருக்கின்றது.இந்த அறக்கட்டளைக்கு கோயில் கட்டுவதற்கான நன்கொடை மற்றும் கட்டுமானப் பொருள்களை பல்வேறு தரப்பினர்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவானது வருகின்ற ஐந்தாம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கு பெற்று அடிக்கல் நாட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்றின் காரணமாக இந்த அடிக்கல் நாட்டு விழாவில் நேரடியாக பங்கு பெறுவதற்கு 200 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க கூடாது என்று அசாதுதீன் ஓவைசி எதிர்க்க கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசியல் சட்டத்தின் கீழ் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டால் அது அரசியல் சட்டத்தை மீறிய செயலாக மாறிவிடும். அரசியல் சாசனத்தின் அடிப்படை மதச்சார்பற்ற தன்மை தான் என்று பதிவு செய்துள்ளார்.

Categories

Tech |