Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இந்த வார்த்தைகளுக்கும் தடை போடுவீங்களா PM?”….. ராகுல் காந்தி கேள்வி….!!!!

நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் குறிப்பிட்ட புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டது. இதனை உறுப்பினர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அந்த புத்தகத்தில் வெட்கக்கேடு, துரோகம், ஊழல், ஒட்டி கேட்டு ஊழல், கொரோனா பரப்புபவர், நாடகம், கபல நாடகம், திறமையற்றவர், அராஜவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி காளிஸ்தானி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்களின் (20 – 24 வயது) வேலைவாய்ப்பின்மை 2 மடங்கு அதிகரித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுபற்றிய புள்ளி விவரங்களை ட்விட்டரில் பதிவிட்டு, “பிரதமரை நோக்கி ‘தவறாக வழிகாட்டினீர்கள். துரோகம் செய்தீர்கள். ஏமாற்றினீர்கள்’ என்ற வார்த்தைகளை வேலையில்லாத இளைஞர்கள் கூறலாமா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் `பேசக்கூடாத வார்த்தைகள்’ பட்டியலை மத்திய அரசு வெளியிட்டதற்கு ராகுலின் எதிர்வினை இது.

Categories

Tech |