மானாமதுரை, மேல கொண்டகுளம், திண்டுக்கல், அம்பாதுரை, ராஜபாளையம், சங்கரன் கோவில் மற்றும் சூரியூர் பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே செப்டம்பர் மாதத்தில் ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம் மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வியாழக்கிழமை தவிர ராமேஸ்வரத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1.30 மணிக்கு 150 நிமிடங்கள் நேரம் தாழ்த்தி மதுரை ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மதியம் 12:30 மணிக்கு பதிலாக மதியம் 1.10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாக புறப்படுகிறது. மேலும் திருச்சி மானாமதுரை திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 22ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர சிவகங்கை மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திண்டுக்கல் அம்பாதுரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெற போகும் பராமரிப்பு பணிகளால் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கோயம்புத்தூர் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில் வெள்ளி செவ்வாய் சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படுகிறது.
இதே காலகட்டத்தில் சென்னை குருவாயூர் விரைவு ரயில் மதுரை கோட்டப்பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் காலதாமதம் ஆகும் இயக்கப்படுகிறது. இதனால் மூன்று நாட்களும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு வாஞ்சி மணியாச்சி தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இணைப்பு ரயிலாக செயல்படாது.மேலும் ராஜபாளையம் சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் மதுரையில் காலை 11:30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை செங்கோட்டை செங்கோட்டையிலிருந்து காலை 11:50 க்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை மதுரை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. கோவில்பட்டி ரயில் நிலையத்தில் செப்டம்பர் 21 22 ஆகிய இரண்டு தினங்களில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அந்த இரண்டு நாட்களும் பாலக்காடு திருச்செந்தூர் விரைவு ரயில் மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு விரைவு ரயில் போன்றவை சாத்தூர் திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
குமாரபுரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 28, 29 போன்ற இரு நாட்கள் பாலக்காடு திருச்செந்தூர் பாலக்காடு விரைவு ரயில் கோவில்பட்டி திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த பணிக்காக இந்த ரயில்கள் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று மதுரை திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு பாலக்காடு செல்லும் ரயில் மதுரையிலிருந்து மாலை ஆறு முப்பது மணிக்கு புறப்படுகிறது. தென்காசி செங்கோட்டை இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் செப்டம்பர் 20 முதல் 30 வரை மதுரையிலிருந்து மாலை ஐந்து 15 மணிக்கு புறப்படும் மதுரை செங்கோட்டை விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து மாலை 6:15 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி செங்கோட்டை விரைவு ரயில் போன்றவை தென்காசி செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.