Categories
தேசிய செய்திகள்

இந்த வருடம் முதல் குடிமக்களுக்கு இலவசம்…. மத்திய அமைச்சர்கள் வெளியிட்ட தகவல்….!!!!!!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற 18ஆவது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டத்தில் இந்த வருடம் முதல் தொலை சட்ட சேவை நாட்டில் குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய சட்டமன்ற நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜி தெரிவித்துள்ளார். இதன் மூலமாக ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பொது சேவை மையங்களில் காணொளி உட்கட்டமைப்பு மூலம் வழக்கறிஞர் தொடர்பு கொண்டு விளிம்பு நிலை மக்கள் சட்ட உதவி பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. எளிதான மற்றும் நேரடி அணுகலுக்காக தொலைச்சட்ட செயலி 2021 ஆம் வருடம் தொடங்கப்பட்டுள்ளது.

இது தற்போது 22 மொழிகளில் கிடைக்கின்றது. மேலும் இந்த டிஜிட்டல் புரட்சியின் பயனாக தொலைச்ச சட்ட சேவைகள் வெறும் ஐந்து வருடங்களில் 20 லட்சம் பயனாளிகளுக்கு விரிவு படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் போது நீதித்துறை சட்டம் மற்றும் நிதி அமைச்சகம் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் போன்றவை இணைந்து சட்ட செயல்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டுள்ளனர். அனைவருக்கும் நீதிக்கான காரணத்தை முன்னெடுத்து செல்வதற்கும் குடிமக்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய காரணியாக சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதற்கும் எங்களின் கூட்டு உறுதிபாட்டின் அடையாளமாக இந்த புரிந்துணர் ஒப்பந்தம் இருக்கிறது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 700 வழக்கறிஞர்கள் சேவைகளை இந்த திட்டத்தின் கீழ் பிரத்யோகமாக ஆணையம் வழங்கும். இந்த வழக்கறிஞர் தற்போது பரிந்துரை வழக்கறிஞராகவும் செயல்படுகிறார்கள். மேலும் வழக்குகள் முந்தைய  கட்டத்தில் தகராறு தவிர்ப்பு மற்றும் தகராறு தீர்வு காண முறை வலுப்படுத்தவும் உதவுவார்கள் என அமைச்சர் கிரண் ரிஜிஜி  நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றார்.

Categories

Tech |