Categories
தேசிய செய்திகள்

இந்த வகுப்புகளுக்கு மட்டும்…. ஜூலை-15 பள்ளிகள் திறப்பு…. மஹாராஷ்டிரா அரசு அறிவிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல்  8 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் முதல் வேலையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி பள்ளிகளை பணிகளை கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |