Categories
தேசிய செய்திகள்

“இந்த மாதத்திற்குள் சிறுவர்களுக்கு தடுப்பூசி வந்துவிடும்”… சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் தகவல்…!!

சிறுவர்களுக்கான தடுப்பூசி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிடைக்கும் என சீரம் இன்ஸ்டியூட் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

நேற்று இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டு வரலாறு சாதனை படைக்கப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கோவேக்சின், கோவிஷீல்டு போன்ற இரண்டு ஊசிகளை மட்டுமே போட்டு வருகின்றனர். இதில் 80 சதவீதம் பேர் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுள்ளனர். இந்த தடுப்பூசி புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. நேற்று 100 கோடி தடுப்பூசி போடப்பட்டதை தொடர்ந்து சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்தலைவர் ஆதர் புன வல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது: “சீரம் இன்ஸ்டியூட்டில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை தயாரித்து வருகிறோம். தற்போது மாதத்திற்கு 22 கோடி என்ற அளவில் மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அடுத்த ஆண்டு இந்த உற்பத்தி 24 கோடியாக உயர்த்த வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதால் அதற்கு ஏற்றார் போல் நாங்களும் மருந்துகளை தயாரித்து வழங்கி வருகிறோம்.

அடுத்ததாக பூஸ்டர் தடுப்பூசி போட்டதால் அதற்கான மருந்துகளை நாங்கள் தயாரிக்க உள்ளோம். குறிப்பாக முதியவருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகின்றது. சிறுவர்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள் கோவாவேக்ஸ் என்ற பெயரில் பிரத்யேகமாக தயாரித்து வருகிறோம். இதற்கான சோதனை விரைவில் முடிந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும். நாங்கள் தயாரிக்கும் தடுப்பூசி மருந்துகளை உலக சுகாதார நிறுவனத்தின் வழியாக வெளிநாடுகளுக்கும், அனுப்புவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |