Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த பழக்கத்தை விட முடியல…. கணவரை கண்டித்த மனைவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மதுபழக்கத்தை கைவிட முடியாமல் தவித்த விவசாயி பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள திடுதல் கவுண்டம்பாளையம் பகுதியில் பழனிசாமி(38) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும், பிரவீன் என்ற மகனும் பிரனிசா மகளும் உள்ளனர். இந்நிலையில் பழனிசாமிக்கு மதுபழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளார்.

மேலும் மது பழக்கத்தை கைவிட முடியாமல் மனமுடைந்த பழனிசாமி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக பழனிசாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட நிலையிலும் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |