Categories
மாநில செய்திகள்

இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த தடை…. தமிழ்நாடு அரசு அதிரடி…..!!!!!!

அரசிதழில் இல்லாத பகுதிகளில் வடமாடு,மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி தாலுகா கண்டனூர் கிராமத்தில் ஸ்ரீ கறிவேப்பிலை காளியம்மன் கோவில் படைப்பு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி வழங்க கோரிய வழக்கில், காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Categories

Tech |