அதானி துறைமுக நிர்வாகம் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சரக்குகளை கையாள போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது.
அதானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குஜராத் மாநிலம் முத்ரா துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த துறைமுகம் தொழிலதிபர் கவுதம் அதானியின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த போதை பொருளின் தேசிய மதிப்பு சுமார் 20 ஆயிரம் கோடி இருக்கும் என தகவல்கள் வெளியாகின. மேலும் இது ஈரானில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 3000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் துறைமுகத்திலிருந்து கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வரும் சரக்குகளை கையாள போவதில்லை என அதானி துறைமுக நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.