கர்நாடகாவின் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் உல்லேரஹள்ளி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 100 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். அதில் 80 சதவீதம் பேர் ஒக்கலிகா என்னும் சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி கிராம மக்கள் பூதையம்மா திருவிழா நடத்தி இருக்கின்றனர். ஆதிக்க ஜாதியினர் மட்டுமே கோயில் கோவில் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்பது அந்த கிராமத்தில் காலம் காலமாக பின்பற்றக்கூடிய வழக்கம் என தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் திருவிழாவில் ஒரு பகுதியாக கிராம தெய்வமான சிடிரன்னாவின் ஊர்வலத்தை கிராம மக்கள் எடுத்து சென்றுள்ளனர். அப்போது அங்கு பட்டியல் இனத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் சாமியை வழிபட ஊர்வலத்தின் பாதையில் பெற்றோருடன் காத்துக் கொண்டிருந்தான் ஊர்வலம் அருகே வந்தபோது சாமி சிலையிடம் இணைக்கப்பட்ட கம்பத்தில் அந்த சிறுவன் கைகளை வைத்து வணங்கி இருக்கிறான்.
அதை கிராமவாசிகளில் ஒருவர் பார்த்து விட்டார் உடனடியாக கிராமப் பெரியவர்களிடம் கூறியுள்ளார். அதன் பின் சிறுவனையும் அவரது குடும்பத்தினரும் ஊர் பெரியவர்களிடம் ஆஜராகும் படி உத்தரவு போட்டு இருக்கின்றனர். பஞ்சாயத்தில் ஆஜரான சிறுவனுக்கு 60,000 அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் அக்டோபர் ஒன்றாம் தேதிக்குள் தொகையை கட்டவில்லை என்றால் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுவனின் தாய் ஷோபம்மா பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகின்றார். இவர் 13,000 சம்பளத்தை வைத்து தான் குடும்பத்தை நடத்தி வருகின்றார் கணவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவர் மட்டும்தான் குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார்.
இந்த சூழலில் பஞ்சாயத்தில் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருப்பது அவரை கடுமையான மன உலைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. இது பற்றி அவர் பேசும்போது கடவுளுக்கு நம் தொடுதல் பிடிக்கவில்லை என்றால் அல்லது மக்கள் நம்மை ஒதுக்கி வைக்க விரும்பினால் நாம் பிரார்த்தனை செய்வதால் என்ன பயன் மற்றவர்களை போல நானும் கடவுளுக்காக பணத்தை செலவழித்து இருக்கிறேன் கடவுளுக்கு நன்கொடை அளிக்கின்றேன். இனிமேல் நான் அப்படி எதுவும் செய்யப் போவதில்லை இனி எனது வீட்டில் டாக்டர் அம்பேத்கரை மட்டும்தான் வழிபடுவேன் என ஷோபம்மா தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இந்த சம்பவம் பற்றி உள்ளூர் சமூக ஆர்வலர் மூலம் காவல்துறைக்கும் ஊடகங்களுக்கும் தகவல் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது இதனை தொடர்ந்து பட்டியல் இன சிறுவர்களுக்கு அபராதம் விதித்த ஊர்காரர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவாகி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.