சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் மகன் ஆவார். நீதிபதி ஓய்.வி.சந்திர சூட் 1978 ஆம் ஆண்டு சுப்பரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு 1985 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் எமர்ஜென்சி காலத்தில் அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக அதிக ஆண்டுகள் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதல்முறையாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தந்தை, மகன் பதவி வகித்த சாதனை நிகழ உள்ளது. அதாவது, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த போது அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர்.
அவர் தனது தந்தை வழங்கிய இரண்டு தீர்ப்புகளையும் ரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சட்டத்தில் பட்டம் பெற்றவர். இளம் வயதில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களில் ஒருவரானார். 1998 ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அவர் ஒக்லஹாமா பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டம் கற்பிக்கும் பேராசிரியராக இருந்தவர். இதற்கிடையில் 2000 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் 13 ஆண்டுகள் பணியாற்றினார். 2013ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து வழக்கமான நீதிமன்ற பணி நேரத்தை தாண்டி இரவு வரை அமர்ந்து வழக்குகளின் கோப்புகளை ஆராய்ந்து முடித்துவிட்டு செல்பவராக உள்ளவர். மேலும் சபரிமலைக்குள் பெண்கள் நுழைய அனுமதி உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளில் வழங்கப்பட்ட முக்கியமான தீர்ப்புகளில் அவர் ஒரு பகுதியாக இருந்து உள்ளார்.